கடல் நீர் உட்புகுவதால் உவர் நிலமாகும் வயல் நிலங்கள்!

கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள வயல் நிலங்கள் உவர்நிலமாக மாறுவதால் விவசாயத்தைக் கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மண்டைக்கல்லாறு உவர்நீர்த் தடுப்பணை இல்லாததால், கடல் நீர் வயல் நிலங்களுக்குள் உட்புகுகின்றது. வயல் நிலங்கள் உவர் நிலமாக மாறுவதால் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளைக் கைவிட்டுள்ளனர். இப்போது வயல் நிலங்களில் உப்பு விளைந்து காணப்படுகின்றது. அந்தப் பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் இந்த நிலைமையால் பெரும் பாதிப்புளை எதிர்கொண்டுள்ளனர்.

விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையில், வாழ்வாதாரத் தேவைகளுக்காக இப்போது உப்பு அறுவடையில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. உரிய அதிகாரிகள் உவர்நீர்த் தடுப்பணை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.