செம்மணியில் அகழ்வுகள் தொடர்கின்றன…

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதை குழியில் இருந்து இன்றைய தினம் (02) மேலும் 4 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றைய தினம் 41வது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது 222 மனித என்புக்கூடுகள் மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இன்றைய தினம் 8 மனித என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் இதுவரையிலும் 206 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் தொடர்ச்சியான அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாதீடு தயாரிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் குறித்த பாதீடு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.