செம்மணி அகழ்வுகள் தொடர்கின்றன…

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் நடத்தப்பட்ட ஜி.பி.எஸ் ஸ்கேன் ஆய்வு தொடர்பான முழுமையான அறிக்கை இதுவரை நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த அறிக்கையின் சுருக்கமான அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டு, மேலதிக அகழ்வுப் பணிக்காக 08 வாரங்கள் கால அவகாசம் தேவை என முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஸ்கேன் பரிசோதனைக்கு அமைய குறித்த பகுதியில் வித்தியாசங்கள் காணப்படுவதால் அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கூறி கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 36ஆவது நாளுக்கான அகழ்வுப் பணிகள் இன்று (28) இடம்பெற்றன.

இதற்கமைய இன்றைய தினம் 08 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
இதுவரை 177 மனித என்புக்கூடுகள் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியிலிருந்து வெளிப்பட்டுள்ளன. அவற்றில் 164 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.