காசா மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி!

உதவித் தொகை வழங்குவதன் மூலம் காசாவில் உள்ள  40 மாணவர்களுக்கு தமது உயர்கல்வியை பிரித்தானியாவில் தொடர்வதற்கு  பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அந்தவகையில் சுமார் 40 மாணவர்களுக்கு பிரித்தானிய அரசு குறித்த புலமைப்பரிசிலை வழங்கியுள்ளது. இதில், ஒன்பது மாணவர்கள் Chevening திட்டத்தின் கீழ் மாஸ்டர்ஸ் பட்டப்படிப்பை தொடர அரசு உதவியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தனியார் நிதி உதவித்திட்டங்களின் கீழ் முழுமையான உதவித்தொகை பெற்றுள்ள மற்றுமொரு 30 மாணவர்களும் கல்விக்காக செல்ல உட்துறை செயலரால் அனுமதி வழங்கப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து காசாவில் இருந்து பிரித்தானியாவுக்கு  கல்விக்காக செல்லும் முதல் மாணவர்கள் இவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், அவர்கள் காசா பகுதியை விட்டு வெளியேற இஸ்ரேலின் ஒப்புதல் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.