யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாவது அமர்வு நேற்று (25) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று (26) இரண்டாவது நாளாக அகழ்வுப் பணிகளின் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய, இன்றைய அகழ்வுப் பணிகளின் போது 16 என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.
சிறுவர்களுடையது என சந்தேகிப்படும் என்புக்கூட்டு தொகுதிகளும், ஆடையை ஒத்த துணியும் வெளிப்பட்டுள்ளதாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனிடையே, முன்னதாக இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போது 147 என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 163ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக வெளிப்பட்ட என்புக்கூட்டுத் தொகுதிகளில் 133 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.