விரைவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவு செய்ய முடியும்!

விரைவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை நிறைவு செய்ய முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழு அண்மையில் கூடிய போது, அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியேன்சி ஹர்ஷகுலரத்ண இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த சட்டமூலத்தில் கொண்டு வரப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழு இதுவரையில் 14 சந்தர்ப்பங்களில் கூடியுள்ளது.

இதன்படி, குறித்த குழு மீண்டும் நாளைமறுதினம் (22) கூடவுள்ளது. அதேநேரம், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பொது மக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உள்ளிட்டவற்றிடம் இருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.