செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று வெள்ளிக்கிழமை (15.08.2025) கவயீர்ப்பு நடைப்பணமொன்றும் இடம்பெற்றது.
இந்த கவனயீர்ப்பு நடைப்பயணம் ‘நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நடைப்பயணத்தின் இறுதியில் பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தில் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தும் கோரிக்கை மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.