மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இரண்டாம் கட்ட காற்றாலை மின்னுற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள்,எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மன்னார் – காற்றாலை திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (13) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் 4 மணியளவில் இந்த சந்திப்பு ஆரம்பமானது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு குறித்த நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இந்த காலப்பகுதியில் காற்றாலை மின் திட்டம் தொடர்பில் மீளாய்வு செய்து அது குறித்து மக்களுக்கு விளக்கம் அளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிவில் சமூக அமைப்புக்கள் தங்களின் போராட்டங்களை இடைநிறுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்களை தற்போது முன்னெடுத்துள்ளன.



