அரசுக்கு சொந்தமான காணிகளில் உள்ள சிக்கல்களை உடனடியாகத் தீர்த்து, தரவுத்தளம் ஒன்றைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்காற பாதீட்டு ஒதுக்கீடு மற்றும் 2026ஆம் ஆண்டு பாதீட்டுக்கான திட்டங்கள் குறித்த கலந்துரையாடலின் போதே அவர் இதனை அறிவுத்தியுள்ளார்.
2026ஆம் ஆண்டு பாதீட்டைத் திட்டமிடும்போது நாட்டை தற்போதைய சூழ்நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முக்கியமான துறைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத் துறைகளில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இதேவேளை உள்ளூர் பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளை கைத்தொழில்களாக மேம்படுத்த அடுத்த பாதீட்டில் அதிக கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.