மன்னாரில் மக்களின் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் 2வது கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய திட்டங்களுக்கு எதிராக, மன்னார் பஜார் பகுதியில் கடந்த ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று திங்கட்கிழமை, இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கிராம மக்களும் கலந்துகொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை (11) மன்னார் தீவுப் பகுதியில் 2வது கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டபோது, தள்ளாடி சந்தியில் மக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதிலிருந்து, தள்ளாடி மற்றும் மன்னார் சுற்றுவட்டப் பகுதிகளில் பொது அமைப்புகள் மற்றும் மக்கள் சுழற்சி முறையில் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, காற்றாலை கோபுரங்களுக்கான பாகங்கள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டபோதும், மக்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது.