பொத்துவில் படுகொலை நினைவு நாள்…

1990.07.30 அன்று இராணுவமும் ஊர்காவல் படையும் இணைந்து சுமார் 132 பேரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று அன்று முதல் 1990.08.02 வரை அந்த அப்பாவிப் பொதுமக்களைத் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகச் சுட்டும்,வெட்டியும்,எரித்தும் கோரமாகக் கொலை செய்தார்கள்.

இந்த 132 பேரில் 6 அல்லது 7 பேர் தப்பினார்கள் ஏனையோர் கொல்லப்பட்டார்கள். எனவே இங்கும் விரைவில் அகழ்வுப் பணிகள் நடக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அன்று ஊர்காவல் படைகளில் இருந்தவர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.