இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 199 இந்திய கடற்றொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்தி 27 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
அதேநேரம், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கை காரணமாக தங்களது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக வடக்கு கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயத்தில் பாதுகாப்பு தரப்பினர் உரிய முறையில் செயற்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தங்களிடம் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெற்று விசாரணை நடத்தும் பாதுகாப்பு அதிகாரிகள், இந்திய கடற்றொழிலாளர்களை கவனத்திற் கொள்வதில்லை என்றும் அந்த மக்கள் கூறுகின்றனர்.