மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கான சட்ட கட்டமைப்பைத் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், அதற்கான எல்லை நிர்ணய செயல்முறை இதுவரை நிறைவடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான புதிய தேர்தல் முறைமைக்கான வரைவு விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது.

அதற்கான சட்ட வரைவை விரைவாக நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். முன்னதாக மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் என்று பெபரல் அமைப்பு உட்பட்ட பல அமைப்புக்கள்  கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.