தமிழ் மக்களின் வாழ்வியல் வரலாற்றில் மறக்க முடியாத, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகள் அழிக்கப்பட்ட, இன அழிப்புகளில் ஒன்றான கறுப்பு ஜூலையை நினைவு கூறும் முகமாக பொது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் உள்ள வெளிக்கடை தியாகிகள் அரங்கில் இடம் பெற்றது.இதனை திருகோணமலை நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.
‘1983 களில் தமிழர்களுடை வாழ்வியலை அளித்த ஜூலை கலவரம், தமிழர்களுடைய வாழ்வியல் பரப்பில் தங்களுடைய வாழ்வை அலங்கோலமாக்கி அலைந்து திரிந்து உடமைகளை உயிரை இழந்து புலம்பெயர் தேசங்களுக்கு கூடுதலான தமிழர்கள் இடம் பெயர்ந்து, அல்லோல கல்லோலப்பட்ட நாள் ஒன்றினை இன்னுமொரு யுகத்துக்கும் சந்ததிக்கும் நினைவுபடுத்தி கடத்திச் செல்கின்ற அந்த நிகழ்வை திருகோணமலையில் செய்கின்றோம்.
இந்த நாள் தமிழர்களுடைய ஒரு கரி நாளாக, தமிழர்களுடைய வாழ்வில் இனப்படுகொலையின் ஆரம்ப நாளாக இதனை பார்க்கின்றோம். தமிழர்களுடைய வாழ்வியல் பரப்பில் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. ஜூலை 23 தொடங்கிய கலவரம் அதற்கு பின்னர் பல்வேறு நாட்கள் இடம் பெற்று தமிழர்களை அவர்களுடைம பண்பாட்டியலையும் வாழ்வியலையும் கூறு போட்ட நிகழ்வாக திருகோணமலை நண்பர்கள் வட்டம் சார்பாக நினைவு கூறுகிறோம்’ என நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.