யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இன்றைய (21) அகழ்வின் போது 07 என்புக்கூட்டுத்தொகுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு இன்று (21) ஆரம்பமானது.
இந்தநிலையில், இன்று 07 என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றிலிருந்து எதிர்வரும் 15 நாட்களுக்கு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின், முதலாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் போது 65 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.