பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7,735 இலங்கையர்கள் உயிரிழப்பு

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7,735 இலங்கையர்கள் கடந்த 15 வருடங்களில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்றவர்கள் தொடர்பான தகவல்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லையெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அந்த அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கடந்த 15 வருடங்களில் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7,735 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 4,769 பேரின் உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதும், 2,966 உடல்கள் இன்னும் நாட்டுக்கு கொண்டவரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொண்டு வரப்பட்ட ஒரு உடல் இன்னும் உறவினர்களால் அடையாளம் காணப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.