விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று (10.07.2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் நிலக்கீழ் பதுங்குகுழியில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் அதனையும் வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.