விடியலைத்தேடி மயிலிட்டித்துறை – கலாநிதி சூசை ஆனந்தன்

வடபுலத்தில் மட்டுமல்ல இந்த நாட்டிலேயே  முதன் முதலாக அமைக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ் குடாவில் வலி வடக்கு கரையோரமாக   தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் மயி லிட்டியானது  வடக்கில் பாக்கு நீரிணையும் மேற்கே தையிட்டி,  கிழக்கே பலாலி , தெற்கே கட்டு வனையும் எல்லைகளைக் கொண்டு  இட அமைவு பெற்றுள்ளது.
போரின் முன்னரான காலப்பகுதிஈழப் போரின் முன்னரான காலப் பகுதியில் (1980)வடபுலத்தில் இதன் அமைவிடம் காரணமாக கரையோர மற்றும் ஆழ்கடல் மீன் பிடியில் மிகச்சிறப்பான இடத்தைப் பெற்ற ஒரு இடமாக விளங்கியயிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1970களில் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமாக இயங்கிய பாரிய இழுவைக் கப்பல்களில் ஒன்றின் பெயர் “மயி லிட்டி”ஆகும். அந்தளவுக்கு பிரசித்தி பெற்றிருந்த இடமாக மயிலிட்டி விளங்கியது. வடக்கே பாக்கு நீரிணை, வடகிழக்கே புகழ் பெற்ற பேதுரு மீன்பிடித் தளம் (Pedro bank) கிழக்கே வங்காள விரிகுடா ஆழ்கடற் பகுதி கரையோர மற்றும் ஆழ்கடல் மீன்பிடிக்கான சமுத்திரச் சூழலைக் கொண்டு விளங்கியது.வடகீழ் ( வாடை) மற்றும் தென் மேல்  ( சோளகம்) பருவங்களில் ஏற்படும் பருவக்காற்று நீரோட்டங்களும் இப்பிரதேச மீன்பிடித் தொழிலுக்குச் சாதகமான நிலைமைகளக் கொண்டதாக அமைந்திருந்தது.
சிறந்த ஆழ் கடல் ஓடிகளைக் கொண்டி ருந்த மயிலிட்டி விரிகடலுக்குரிய பெரிய வகை மீன்களையும் (பாரை கட்டா ரியூனா வகை அறக்குளா,தளப்பத், கொப்பரை, சுறா திருக்கை) கரையோர சிறிய ரக (சாலை சூடை, கும்பளா) மீன்களையும் இறால் நண்டு, கணவாய், கடலட்டை, சங்கு போன்ற ஏற்றுமதிசார் கடல் உணவுகளை உற்பத்தி செய்கின்ற ஓர் பகுதியாகவும்  மயிலிட்டி விளங்கியது.அக்காலப் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவக் குடும்பங்களைக் கொண்ட பகுதியாக மயிலிட்டி  விளங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
ஒரு சில கட்டு மரங்களுடன் ‘ஒரு நாட் டுப் படகுகளான  (one day boat) வெளியிணை இயந்திரப் படகுகள் (OBM) உள்ளிணை இயந்தி ரப் படகுகள் (IBM) ஆகியன  மீன்பிடியில் பயன்படுத்தப்பட்டிருந்தன.
வழிச்சல்வலை படுப்புவலை (gill net) தூண்டில் வரிசைகள் ( long line) மற்றும் கூடுகள் (trap) பிரசித்தி பெற்ற மீன்பிடி முறைகளாக விளங்கின.  உள் இணை இயந்திரப்படகுகள் மற்றும் வெளியிணை இயந்திரப்படகுகளின்  உதவியுடன் வடகிழக்கே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பேதுரு மீன்பிடித் தளத்திலும்  ( Pedro bank) அதற்கு அப்பாலிலுள்ள ஆழ்கடலிலும் வழிச்சல் வலை மற்றும் தூண்டில் வரிசை மீன் கூடுகள் மூலமாகவும் மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆழ்கடல் மீன்பிடியிலே துணிச்சல் பெற்ற மீனவர்களாக மயிலிட்டி மீனவர்கள் அன்றும் இன்றும் விளங்கி வருகின்றனர். 1964 இல் ஏற்பட்ட வங்காள விரி
குடா சூறாவளியின்போது ஆழ்கடலுக்குச் சென்றி ருந்த பல மீனவர்கள் காணாமல் போயிருந்த துயரத்
தையும், வலியையும்  இக்கிராமம் சந்தித்திருந்தது. வலி வடக்கு கரையோரத்திலே மாதகல், சேந்தான் குளம்,  மாரீசன் கூடல், கே.கே.எஸ், பலாலி, வலித்தூண்டல், ஊறணி, வளலாய், தையிட்டி, அக்கரை ஆகிய பிரதான மீன்பிடிக் கிராமங்களும் அமைந் துள்ளன.
2025 இல் 2161     மீனவ குடும்பங்களைச் சேர்ந்த  8672 மீனவர்கள் வலிவடக்கு கரையோரத்தில் வாழ்
வதாக மதிப்பிடப் பட்டுள்ளது.இதில் மயிலிட்டி யில் 2840 மீனவர்களும் பலாலியில் 2080 மீனவர் களும் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  மீன்பிடி படகுகளில் 634 வெளியிணைப்படகுகளும் இயந்தி ரம் பூட்டிய மற்றும் இயந்திரம் பூட்டாத வள்ளங்கள் 50 வரையில் மீன்பிடியில் ஈடு படுத்தப்பட்டுள்ளன.மயிலிட்டியில் 190 படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. ஆழ்கடலுக்குரிய பல நாட் கலங் கள் ஆக இரண்டு மட்டுமே மயிலிட்டியில் காணப்படுகின்றன.பெரும்பாலும் மயிலிட்டி துறைமுகத்தில நூற்றுக்கும் மேற்பட்ட பல நாட் கலங்கள் (multi day boat )தென்பகுதி மீனவர்களுக்குச் சொந்தமானவையாகவே உள்ளன. வங்காள விரி
குடாவில் டிசம்பர் காலப்பகுதில் நிலவும் சூறா வளி காரணமாக படகுகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் நோக்கிலே மயிலிட்டி துறைமுகம் சகல வசதிகளுடனும்  நிர்மாணிக்கப்பட்டிருந்தது. கீரிமலை, பலாலி விமானத்தளம், பலாலி பெரும் படைத்தளம் ,கே.கே.எஸ் சீமெந்து தொழிற் சாலை KKS துறைமுகம் போன்ற சுற்றாடல் மையங்கள் மயிலிட்டித்துறைக்கு மேலும் மெருகூட்டியிருந் தன.
கடல்வளத்துறையில் தனித்துவமான இடத்தினை வகித்துவந்த போதிலும்  1983 இனக் கலவரத்தை  தொடர்ந்து இராணுவ நெருக்குவாரம், கெடுபிடிகள்  காரணமாக மீன்பிடியில் பெற்றிருந்த முக்கியத்துவத்தை இக்கிராமம்  முற்றாக இழந் தது.1990 இல் அரசினால் பிறப்பிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலய பிரகடனம் (HSZ) காரணமாக உயிர், உடைமைகள் ,வளமான நிலங்களை இழந்து மீன்பிடி துறையையும் இழந்து கிராமத்தை விட்டே இடம் பெயர்ந்து அகதிமுகாம்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் வன்னியிலும் தமிழ்நாட்டிலும் தஞ்சமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.
யாழ் குடாவில் பதினைந்து (15) இடங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப் படுத்தப் பட்டிருந்தன. அதில் வலிவடக்குப்பகுதியே பரந்த நிலப்பரப்பை ஆக்கிரமித்திருந்தது .மாவட்டத்தில்  மொத்தமாக 160   ச.கி.மீ பரப்புடைய பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.மொத்த நிலப்பரப்பில் இத 18  சத வீதமாகும்.வலி வடக்கில்  உள்ள 25,000 வீடுகளில் 18,000 வீடுகள் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்தன.10,332 குடும்பங்கள் இடம்பெயர்ந்தவர்களாயினர். வலி வடக்கிலுள்ள 46 பாடசாலைகளில் 29 பாடசாலை கள் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இருந்தன. இவற்றுள் பலாலி வடக்கு வயாவிளான் GTMS பாடசாலையும் ஒன்று. இப்போது மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்ட பின்பு இப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1-5  ஆம் ஆண்டு வரையில் வகுப்புகள் உள்ளன. மாணவர் தொகை மிக குறைவாகவே உள்ளதாக குறிப்பு ஒன்று கூறுகிறது.வலி வடக்கிலே . 16 பாடசாலைகள் மூடப்பட்டன. 13 பாடசாலைகள் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே இயங்கியது. கல்விநிலையானது அதன் தனித்துவத்தை இழந்து போனது. பல ஆலயங்கள், கோவில்கள், வைத்திய சாலைகள்  இயங்காது அழிந்தன. இப்போது மீளக் குடியமர ஏற்பாடுகள் மிக மந்த கதியிலேயே உள்ளன.இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளன எனக் கூறப்படுகின்றது.
போரின் பின்னர் (2009)போர் நிறைவடைந்து பலவருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் (2009) மயிலிட்டி பகுதியிலிருந்து வெளியேறியோர் இன்னும் சொந்த இருப்பிடத்திற்கு முழுமையாகத் திரும்ப முடியவில்லை. சில பகுதி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. போரின் பின்னர் தடல் புடலாக இத்துறைமுகம் விருத்தி செய்யப்பட்டதாயினும்  (2017) இதன் முழுமையான பயன்பாட்டினை  தென்பகுதி ஆழ்கடல் பல  நாட்கள் (multy day boat) மீனவர் களைவிட மயிலிட்டி மீனவர்களால் பெற்றுக் கொள்ள முடியாத சூழலே நிலவுகின்றன.
பதனிடல் வசதிகள் களஞ்சிய வசதிகள், எரிபொருள் மற்றும் நீர் வழங்கல் வசதிகள்,  போன்ற வசதி கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் ஒருபுறம் தென்பகுதி மீனவர்களின் அதிகரித்த  பிரசன்னம் இன்னொரு புறமாக பிடிபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளின் எண்ணிக்கை. காரணமாக இடப்
பற்றாக்குறை ஏற்பட்டு முழுமையாக பயன்படுத்த முடியாதநிலை தோன்றியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் இப்பகுதி தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மக்கள்வாழிடங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பது மகா தப்பு.மயிலிட்டி மக்கள் விடியலுக்காக காத்திருக் கின்றனர்.விடிவு விரைவில் கிடைக்கட்டும்