செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியில் இன்றும் 4 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கமைய, இதுவரை 37 மனித என்புக் கூட்டு தொகுதிகள் குறித்த புதைகுழியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் 30 மனித என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்தார். அத்துடன் 4 என்புக் கூட்டு தொகுதிகள் பின்னிப்பிணைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சித்துபாத்தி மனித புதைகுழியை அண்மித்த பகுதியில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் ராஜ் சோமதேவவின் மேற்பார்வையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை மாணவர்கள் அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர்.