கொழும்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்

கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இதன்படி, மாநகர முதல்வராக வ்ராய் காலி பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் 61 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ரிசா சரூக் 54 வாக்குகளை பெற்றார்
இரண்டு வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

கொழும்பு மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (16) முற்பகல் 9.30 க்கு ஆரம்பமானது.
எனினும், இந்த அமர்வில் முதல்வரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக நடத்தப்பட வேண்டுமா? இரகசியமாக நடத்தப்பட வேண்டுமா? என்பது குறித்து இரண்டு தரப்புக்குமிடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இறுதியில், முதல்வரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை இரகசிய வாக்கெடுப்பாக நடத்துவதற்கு தீரமானிக்கப்பட்டது. இதனையடுத்து, மேல் மாகாண ஆணையாளர். மாநகர சபை உறுப்பினர்கள் 117 பேரின் பெயர்களையும் வாசித்தார்

அதனடிப்படையில், உறுப்பினர்கள் தமது இரகசிய வாக்கை பதிவு செய்தனர்
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் பிரதி முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் ஹேமந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார்.