ஓய்வு பெற்ற 10,000 இராணுவத்தினரை காவல்துறையில் இணைக்க அரசாங்கம் முடிவு

இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்றவர்களை, காவல்துறையில் இணைக்கும் திட்டத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

தம்புத்தேகம காவல் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நபர்களை ஐந்து ஆண்டுகளுக்கு பணியமர்த்துவதற்கான முன்மொழிவு அமைச்சரவைப் பத்திரம் இன்று (ஜூன் 9) நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.