மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு : நீதி கேட்டு தொடரும் போராட்டம்

Unknown 1 2 மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு : நீதி கேட்டு தொடரும் போராட்டம்

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  திருக்கடலூர் பகுதி மீனவர்கள் இன்று (05) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Unknown 2 1 மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு : நீதி கேட்டு தொடரும் போராட்டம்

குச்சவெளி கடற்பரப்பில்  கடந்த செவ்வாய்க்கிழமை (03) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது குச்சவெளி ஜாயாநகரைச் சேர்ந்த  23 வயதுடைய மீனவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.