2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை: பிரதமர் ஹரிணி

நவீன உலகத்துடன் இணையக்கூடியவாறு எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக சகல பிரிவுகளையும் உள்ளடக்கியவாறு 2026ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தற்போது  பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களுக்கு பதிலாக தற்காலத்திற்கு ஏற்றவாறு மிகவும் அபிவிருத்தி அபிவிருத்தியடைந்த நவீன முறைகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறாேம் என கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (04)  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தினன் போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன, கல்வி மறுசீரமைப்பு திட்டங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.