அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் கடந்த கால அரசாங்கங்களை போன்று தங்களை பொம்மைகளாக பயன்படுத்த முனைகிறது என்று வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தொழிற்சங்கங்களை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திய பின் தூக்கி வீசிவிடுவது வழமை என்று அந்த சம்மேளனம் அறிவித்துள்ளது.
அந்த சம்மேளனத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் கடந்த 4 ஆண்டுகளாக மே தினத்தை முன்னெடுத்து வருகிறது.அந்த வகையில், இந்த முறை நல்லூர் முன்றலில் இருந்து காலை 9மணிக்கு ஆரம்பமாகும் பேரணி ஆரியகுளம் சந்தி வழியாக சென்று, யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அந்த சம்மேளனத்தினர் அறிவித்துள்ளனர். இம்முறை 12 தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.