ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஆட்சிக்கு கொண்டுவருவதில் அமெரிக்கா மிகப்பெரிய இராஜதந்திர சக்தியாக தமது செல்வாக்கை செலுத்தியுள்ளதாக இந்தியாவின் புவிசார் அரசியலில் புகழ்பெற்ற பேராசிரியரும் ஆய்வாளருமான எஸ்.டி.முனி தெரிவித்துள்ளார்.
பலர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் வெளிநாட்டு சக்திகள் இலங்கைத் தீவின் அரசியல் மாற்றத்தில் அதிக செல்வாக்கு செலுத்தியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
புதுடில்லியில் உள்ள முன்னணி பல்கலைக்கழகமொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.