தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைபின் யாழ் அலுவலகத்திற்கு நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை வருகைதந்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, மற்றும் அவரது மகனான வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கலையமுதனும் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் பிரசார மேடையில் ஏறி தமது ஆதரவை தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.



