சிவாஜிலிங்கத்தின் பாதுகாப்பிற்கு செல்லும் நாய்

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணத்தில் பிரச்சார நடவடிக்கைகளை முடித்த பின்னர் மாலை நேரம் கடற்கரையில் சாதாரண உடையான சாரம், சேட்டுடன் நடமாடியதாக புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவருடன் ஒரு நாயும் செல்கின்றது.

பாதுகாப்பின்றி தனியாக செல்வது பற்றி கூறும் போது, தனது பாதுகாப்பிற்கு இரண்டு வெள்ளை நாய்களை தான் வளர்ப்பதாகவும், ஒன்று தன்னுடன் கடற்கரைக்கு வந்துள்ளதாகவும், மற்றையது வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் வல்வெட்டித்துறை கடற்கரை மீனவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு சென்றார்.