முல்லைத்தீவில் உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இன்று(30) மாலை 3 மணியளவில் நடந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.
இந்த விசேட கூட்டத்தில் முன்னாள் வடமாகாண அளுநர் ரெஜினோல்ட் கூரே, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உட்பட பல்வேறு கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



