உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள 6 நகரங்கள் மீது சுமார் 728 ஆளில்லா விமானங்கள் மற்றும் 13 ஏவுகணைகளை வீசி ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுதான் மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில் ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகளை அனுப்ப ஒப்புதல் அளித்திருந்தார்.