இலங்கையில் கடந்த ஏழு மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ள தாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) சிறப்பு அறிக்கை யொன்றை வெளியிட்டு அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி முதல் கடந்த 8 ம் திகதி வரை நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப் பிட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 62 ஒழுங்கமைக்கப் பட்ட குற்றக் கும்பல்களால் நடத் தப்பட்டதாகவும் அதே நேரத்தில் 17 சம்பவங்கள் ஏனைய தரப்பினரால் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரி வித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக 260 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வும், அவர்களில் 229 பேர் ஒழுங்கமைக் கப்பட்ட குற்றங்களு டன் தொடர் புடையவர்கள் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.
அத்துடன் பாதாள உலக குழுவை ஒடுக்கு வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக் கைகளை எடுத்துள்ளதாகவும், 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.