எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் 6 இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் தூத்துக்குடி கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போதே இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 37 முதல் 55 வயதிற்கு இடைப்பட்ட புத்தளம் மற்றும் சிலாபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களே தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இதுவரையில் இந்தியாவில் 18 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.