35 வருடங்களின் பின்னர் பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பேருந்து சேவை இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதி முதல் பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
இதனால், யாழ்ப்பாணம் – பலாலி வீதி வசாவிளான் சந்தியுடன் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி முதல் நிபந்தனைகளுடன் குறித்த வீதி முழுமையாக திறக்கப்பட்டது.
அதனை அடுத்து, இன்று (29) முதல் குறித்த வீதியூடாக காங்கேசன்துறை வரையில் அரச பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நேர அட்டவணை தொடர்பாக பின்னர் அறியத்தருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த வீதியூடாக எதிர்வரும் தினங்களில் தனியார் சிற்றூர்திகளும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.