32 பேர் கொரோனாவுக்கு நேற்று பலி-மரணமானோர் தொகை 1,210 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் நேற்றைய தினம் 32 பேர் மரணமடைந்ததாக தகவல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தோரின் தொகை 1210 ஆக அதிகரித்துள்ளது.