20 வது திருத்தத்தால் பிரதமரின் அதிகாரம் குறையாது – மகிந்த –மேலும் சில செய்திகள்

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தால் பிரதமரின் அதிகாரம் குறைக்கப்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த மகிந்த,

“20 ஆவது திருத்தம் தொடர்பாக அரசாங்கத்திற்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், குறித்த திருத்தம் தொடர் பாக ஆளும் கட்சி ஒருமனதாகத் தீர்மானம் எடுக்கும்.  அத்துடன், குறித்த பரிந்துரைகளை நான் நியமித்த குழு கூட்டத்தில் சேர்க்கப்படும்.” என்றார்.

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை ஐவருக்கு மரண தண்டனை... - GTN

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை-  மேலும் 6 பேர் சிக்கினர்

இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தில் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டமை தொடர்பாக மேலும் ஆறு சவுதி சந்தேக நபர்களுக்கு எதிராக துருக்கி சட்டத்தரணிகள் குற்றப்பத்திரிகையை பதிவு செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களில் இருவர் மீது கடுமையான ஆயுள் தண்டனை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுப்படி, இருவரும் துணைத் தூதரக ஊழியர்கள் மற்றும் சவுதி ஊடகவியாளரின் கொலையைச் செய்த பின்னர் துருக்கியை விட்டு வெளியேறிய குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர் என கூறப்படுகின்றது.

அத்தோடு மற்ற நான்கு பேருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனைக்கான குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் கொலை நடந்த உடனேயே குற்ற சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களை அழித்தார்கள் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

59 வயதான ஊடகவியலாளர் கஷோக்கி கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் வைத்து சவுதி அதிகாரிகள் சிலரால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amnesty International halts India operations, accuses Centre of  'witch-hunt' | India News | Zee News

இந்தியாவில் பணிகளை நிறுத்தும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல்  

மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் தனி கவனம் செலுத்தும் சர்வதேச அரசு சாரா அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்திய அரசின் செயலால் தங்கள் பணிகளை இந்தியாவில் நிறுத்திக் கொள்வதாகக் கூறி உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்திய அரசின் செயல்களை சூனிய வேட்டை எனக் கூறியுள்ள அந்த அமைப்பு இந்த முடிவினை எடுத்துள்ளது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு முறைகேடாக வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டியது. அந்த அமைப்பு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யவில்லை என அரசு கூறியது.

இது தொடர்பாக அம்னெஸ்டி அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய அரசு தங்களைப் பழி வாங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், தங்கள் அமைப்பின் இந்திய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது செப்டம்பர் 10ஆம் தேதிதான் தெரியும் என்றும், இதன் காரணமாக அதன் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அந்த அமைப்பு கூறி உள்ளது.

இந்திய அரசின் இந்த செயலை சூனிய வேட்டை என்று கூறிய உள்ள அம்னெஸ்டி அமைப்பு, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்களின் படியே தங்கள் செயல்பாடுகள் உள்ளதாக கூறி உள்ளது.

இந்நிலையில், அம்னெஸ்டடி இன்டர்நேஷனல் அமைப்பின் இந்திய பிரிவின் செயல் இயக்குநர் அவினாஷ் குமார் கூறுகையில், “அண்மையில் டெல்லி கலவரத்தின் காவல்துறையின் பங்கும் மற்றும் டெல்லி கலவரம், ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் இந்திய அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டோம். நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை, அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தோம். அதனை அடுத்து தொடர்ந்து எங்களை பல்வேறு வழிகளில் அரசு துன்புறுத்தி வருகிறது,” என குற்றஞ்சாட்டி உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரங்கள் தொடர்பான சுயாதீன விசாரணை அறிக்கையை செப்டம்பர் மாதம் வெளியிட்டது அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு.

இந்த அறிக்கையில், டெல்லி காவல்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கலவரத்தைத் தடுக்கத் தவறியது, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளை அடையாமல் தடுத்தது, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்று இருந்தன.

கலவரத்தைத் தொடர்ந்து ஆறு மாதங்களில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மிரட்டப்படுவது, அமைதி வழியில் போராடியவர்களை சிறையில் அடைத்தல் மற்றும் அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அறிக்கையில் உள்ளன. இதில் ஒரு வழக்கு கூட மனித உரிமை மீறலில் டெல்லி காவல்துறை ஈடுபட்டதாக பதிவாகவில்லை என்று அறிக்கையில் கோடிட்டுக்காட்டப்பட்டு இருந்தது. ஆனால் அம்னெஸ்டியின் அறிக்கையை டெல்லி காவல்துறை மறுத்தது.

இந்திய போர்க்கப்பலில் முதல் முறையாக 2 பெண் அதிகாரிகள் நியமனம்.! | ஜனநேசன்

இந்திய போர்க்கப்பலில் 2 பெண்கள் முதல் முறையாக நியமனம்!

சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகியோர் கப்பலின் பணியாளர்களின் ஒரு பகுதியாக கடற்படை போர்க்கப்பல்களில் ஈடுபடுத்தப்படும் முதல் பெண் அதிகாரிகளாக இருப்பார்கள்.

இந்திய கடற்படையில் பாலின சமத்துவத்தை மறுவரையறை செய்யும் நடவடிக்கையில், சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகியோர் கப்பலின் பணியாளர்களின் ஒரு பகுதியாக கடற்படை போர்க்கப்பல்களில் ஈடுபடுத்தப்படும் முதல் பெண் அதிகாரிகளாக இருப்பார்கள். இந்திய கடற்படை அதன் வரிசையில் பல பெண் அதிகாரிகளை நியமித்திருந்தாலும், பெண்கள் இதுவரை, பல காரணங்களால் போர்க்கப்பல்களில் இறங்கவில்லை.

கடற்படை மல்டி-ரோல் ஹெலிகொப்டர்களில் சோனார் கன்சோல்கள் மற்றும் உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் மறுமதிப்பீடு (ஐ.எஸ்.ஆர்) பேலோடுகள் உள்ளிட்ட பல சென்சார்களை இயக்க பயிற்சி பெறும் இந்த இரண்டு இளம் அதிகாரிகளுடன் இது இப்போது மாற உள்ளது.

இரு அதிகாரிகளும் இறுதியில் கடற்படையின் புதிய எம்.எச் -60 ஆர் ஹெலிகொப்டர்களில் பறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டில், விமான லெப்டினன்ட் பவன்னா காந்த், விமான லெப்டினன்ட் அவனி சதுர்வேதி, மற்றும் விமான லெப்டினன்ட் மோகனா சிங் ஆகியோர் இந்தியாவின் முதல் மகளிர் போர் விமானிகளானார்கள்.

தற்போது, 10 போர் விமானிகள் உட்பட 1,875 பெண்கள்  சேவையில் உள்ளனர்.