14 பேரின் இரத்தமாதிரிகளில் வைரஸ் தொற்று இல்லை

வவுனியாவில் நேற்றயதினம் சேகரிக்கப்பட்ட 14 பேரின் இரத்தமாதிரிகளில் கொரோனோ தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனோ வைரஸ் தொற்று தொடர்பான இரத்த மாதிரிகள் சேகரிக்கும் செயற்பாடு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை மற்றும் சுகாதாரவைத்திய அலுவலகத்தால் நேற்றயதினம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்பாணத்தில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்துகொண்ட மற்றும் வேறு பகுதிகளில் தொடர்புகளை கொண்டிருந்த வவுனியாவை சேர்ந்தவர்களிற்கு கொரோனோ வைரஸ்தாக்கம் இருக்கின்றதா எனசோதனை செய்வதற்கான இரத்தமாதிரிகள் சேர்க்கும் நடவடிக்கை கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த சோதனை நடவடிக்கையின் இரண்டாம் கட்ட பணிகள் நேற்றயதினமும் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவின் காத்தான்கோட்டம் மற்றும் ஓமந்தை,புளியங்குளம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட 14 பேரிடம் குறித்த இரத்தமாதிரிகள் சேர்ககப்பட்டதுடன் அவை மேலதிக ஆய்வுகூட பரிசோதனைக்களிற்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.பரிசோதனை முடிவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.