விசா காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் கைது

விசா நிபந்தனைகளை மீறி, விசா காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியிருந்த 155 இந்தியர்கள் அடங்கிய குழு குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியர்கள் தங்கள் தனிப்பட்ட விசா கட்டணமான 200 அமெரிக்க டொலர்களையும், குடிவரவுத் திணைக்களத்துக்கு 500 அமெரிக்க டொலர் அபராதத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கொழும்பில் உள்ள ஒரு கட்டிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.