வடமாகாண நிலைமை குறித்து ஜேர்மன் தூதுவருக்கு ஆளுநர் விளக்கம்

ஜேர்மன் நாட்டு தூதுவர் ஜோன் ரொட் அவர்களை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (04) அன்று சந்தித்துப் பேசிய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வடமாகாண நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார்.

29 வருடங்களுக்குப் பின்னர் காங்கேசன்துறை, கீரிமலை மக்கள் தற்போது தமது பிரதேசங்களை பார்வையிட சென்றுள்ளனர்.  இவர்களின் காணிகளை அவர்களிடமே கையளிக்கும் நிகழ்வுகள் ஏப்ரல் 21இன் பின்னர் தற்போது சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்டு வருவதை தூதுவருக்கு தெரிவித்தார்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக விளக்கமளித்த ஆளுநர், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு உதவ முடியுமான வழிகளில் உதவும்படி கேட்டுக் கொண்டார். வடமாகாணம் எதிர்காலத்தில் முகம்கொடுக்கவுள்ள நீர்ப் பிரச்சினை தொடர்பாக விளக்கமளித்ததுடன் ஐந்து திட்டங்கள் குறித்து விளக்கமளித்து, முதல் திட்டமாக வடமராட்சி களப்பு திட்டம் குறித்து விளக்கமளித்தார், அத்துடன் வடமாகாண பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.