யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் J-435 கிராம சேவகர் பிரிவில், மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையினரால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக, குறித்த பகுதியிலுள்ள கிராம அலுவலருக்கோ, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கோ தெரியப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த குற்றச்சாட்டுத் தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளரிடம் வினவிய போது, இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என்று பதிலளித்தார்.
எவ்வாறாயினும் நாட்டை சூழவுள்ள கடல் மற்றும் கரையோர பகுதியில் வழமையாக முன்னெடுக்கப்படும் அளவீடுகள் மற்றும் ஆய்வுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகவும், கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.