வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணியில் ஸார்ப்!

முல்லைத்தீவு  தச்சடம்பன் அம்பகாமம் ஒலுமடு மற்றும் மாங்குளம் கொக்காவில் பகுதியிலும் , கிளிநொச்சி மாவட்டத்தில்  முகமாலை  இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும்  தட்டுவன்கொட்டி பகுதியிலும் முப்பத்தொரு இலட்சத்து இருபத்தையாயிரத்து ஐநூற்று முப்பத்தெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து எழுபத்தேழாயிரத்து எழுநூற்று ஐம்பத்தைந்து அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபடும் ஸார்ப் ,வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (sharp)மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தச்சடம்பன், அம்பகாமம், ஒழுமடு மற்றும் மாங்குளம் ,கொக்காவில் பகுதியிலும் ,புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதியிலும் ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை, இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் கண்டாவளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி பகுதியிலும்   அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப்  நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு , அம்பகாமம் ,மாங்குளம் , கொக்காவில் , தட்டுவன்கொட்டி மற்றும் ஆனையிறவிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.