ரணிலின் கைதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை!

ரணில் விக்ரமசிங்கவின் கைதும், பிணை வழங்கப்படாமல் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதும், அரசியலமைப்பின் எதேச்சதிகாரம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக எதிரணி அரசியல் கட்சித் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த செயல் அரசாங்கம் எதேச்சதிகாரத்தை நோக்கி பயணிப்பதை எடுத்துக்காட்டுவதாகவும் கூட்டு எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஒரு அரச தலைவரின் கடமைகளுக்கும் தனிப்பட்ட செலவுகளுக்கும் இடையே தெளிவான வேறுபாடுகள் இல்லை என்றும் அந்தக்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன், ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, சட்டத்தை தவறாகப் புரிந்துகொண்டு அரசியல் நோக்கங்களுக்காக கட்டமைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டு என எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.