யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாண நூலகத்தை அபிவிருத்தி செய்ய, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். தேசிய நூலகத்துக்கான கண்காணிப்பு விஜயத்தின் போது அவர் இதனைக் கூறினார்.
யாழ்ப்பாண நூலகத்தில் இருந்ததை போன்று வேறெங்கும் நூல்கள் இருக்கவில்லை எனவும் கடந்த காலத்தில் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.



