யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனாவின் கருத்தால் அமைதியின்மை!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது உள்ளூராட்சி சபைகள் முறையாக கழிவகற்றலை மேற்கொள்ளவில்லை என்றும், இதனால், வீதிகளில் கழிவுகள் குவிந்து கிடப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டினார்.

இதன்போதே, அவருக்கும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இதேவேளை, யாழ்ப்பாண அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இனிவரும் காலங்களில் விடயங்களைத் தவிர வேறு பிரச்சினைகளுக்கு இடம்தரப்பட மாட்டாது என, ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் அவருக்கும் இடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது.