முள்ளிவாய்க்கால் எமதினத்தின் இதயம். ஒவ்வொரு வருடமும் சிங்கள-பௌத்த அரசு தனது அரச இயந்திரத்தை பயன்படுத்தி நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து வருவதோடல்லாமல் நினைவேந்தலை நிறுவனமயப்படுத்தவிடக் கூடாது என்பதில் திண்ணமாய் இருக்கின்றது. அதனால் தான் நினைவுத்திடலை பெயரிட எடுத்த முயற் சிகளை தனது இராணுவக் கரம் கொண்டு நசுக்கியிருக்கின்றது என முள்ளிவாய்க்கால் பொது கட்டமைப்பு வடக்கு கிழக்கு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அதைவிடவும் நாங்கள் இறந்தவர்களை நினைந்து சுடரேற்றும் புனித இடத்தை மாசுபடுத்தி அழித்திருக்கின்றது. இவ்வாறான இராணுவ செயற்பாடுகள் எமதினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலை வேட்கையை திடப்படுத்துமே
தவிர நலிவடையச் செய்யப்போவதில்லை எனவும் கூறியுள்ளது.
குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம், கீழ் உள்ள லிங்கில் பார்வையிலாம்….