1988ம் ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டு தமிழர் தரப்புக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவம் யுத்தநிறுத்தத்தினை மேற்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபடவேண்டும் என கோரிக்கையுடன் 1988ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி தனது சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கிய அன்னை பூபதி, 31 நாட்களின் பின்னர், ஏப்ரல் 19ம் நாள் தனதுயிரை தமிழீழ தேசத்துக்கு காணிக்கையாக்கியிருந்தார்.
ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை தந்த தமிழீழத் தாய்மார்களது குறியீடாக அன்னை பூபதி ஆண்தோறும் நினைவுகூரப்பட்டு வரும் நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகத்தை முடக்கியுள்ள நிலையிலும் அன்னை நினைகூரப்பட்டுள்ளார்.
கவிதை, அன்னையின் நினைவுப் பகிர்வுகள், சிறப்புரை என அமைந்திருந்த இவ்மெய்நிகர் கூட்டத்தில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா உட்பட தமிழ்நாட்டில் இருந்து தமிழ்உறவுகள் பங்கெடுத்து நினைவேந்திக் கொண்டனர்.
தமிழீழ தாய்மார்களின் குறியீடாக அன்னை பூபதி இருப்பதற்கு சான்றாக இன்று தமிழர் தாயகத்தில் தொடர்சியாக நீதிக்கான போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்களது ஓயாத போராட்டத்தினை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த உறுப்பினர் பாலா அண்ணா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.