நாடாளுமன்றத்தில் நினைவேந்தல்…..
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இலங்கை அரசின் தடைகளைத் தகர்த்து, தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம். இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட தரப்பினர் இன்று காலை நந்திக்கடலில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தலைமையில் யாழ் மாநகர சபையில் கோவிட்-19 சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இன்று நடைபெற்றது.
நந்திக்கடலில்….
யாழ். பல்கலையில்…..
வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாள் ”பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்த்து, குறுந்தேசியவாதத்திற்கு அப்பால், புரட்சிகர வெகுஜன எழுச்சியை முன்னெடுப்போம்!” என்ற தொனிப்பொருளில் இன்று யாழ்ப்பாணத்தில் சுடரேற்றி அஞ்சலி உரையுடன் நினைவுகூரப்பட்டது.