வடக்கு கிழக்கில் மனிதாபிமானம் இறந்து நாளாகிவிட்டது என்பதை சாவக்கச்சேரி மருத்துவமனை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை முறைகேடுகளுக்கு பின்னர் மன்னாரில் இடம்பெற்ற மருத்துவ படுகொலையை விசாரணை செய்ய சென்றவரை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவமும் கொலையில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடும் சம்பவமும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.
27 வயதான சிந்துஜாவின் மரணம் முற்று முழுதான மருத்துவப் புறக்கணிப்பால் ஏற்பட்டது என்று தெரிந்தும் இதுவரையில் எந்த பொது அமைப்புக்களோ அல்லது வடக்கு கிழக்கில் உள்ள 13 இற்கு மேற்பட்ட மகளிர் அமைப்புக்களோ, பொதுமக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணுக்காக காத்திரமான நடவடிக்கை எதனையும் இதுவரையில் மேற் கொள்ளவில்லை.
ஆனால் அதனை தட்டிக் கேட்கச் சென்ற வைத்தியர் அர்ச்சுனா கொலை குற்றம் செய்தவர் போல பிணைகூட வழங்கமுடியதா நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை நினைத்து பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையால் வாடும்போதும் சிலர் அதனை கொண்டாடவும் செய்கின்றனர். அர்ச்சுனா வின் தொலைபேசியால் தமக்கு நிம்மதி போகுது என்று சமூகவலைத்தளங்களில் ஒப்பாரி வைக்கும் நவீன சேக்குவாராக்களுக்கு இது ஆனந்தமான செய்தி தான்.
இந்த நவீன சேக்குவாராக்கள் 1970களில் இருந்திருந்தால் மக்களை பாதுகாக்க முழங்கிய பிரபாகரனின் துப்பாக்கியையும் வாங்கி ஒழித்து வைத்திருப்பார்கள். ஆனால் இப்படிப்பட்ட தேசியவாதிகள், அரசியல்வாதிகள், சேக்குவாராக்கள், பொது அமைப்புக்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களை எமது இனம் கொண்டுள்ளதை நினைத்து எமது தேசம் இன்று வெட்கி தலைகுனிந்து நிற்கின்றது. இதனிடையே இந்த மருத்துப் புறக் கணிப்புக்கள், முறைகேடுகள் மற்றும் அதிகாரத் துஸ்பிரயோகங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. தற்போது பருத்தித்துறை மருத்துவமனையிலும் அதிகார துஸ்பிரயோகங்கள் நிகழ்ந்துள்ளது.
அதாவது அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்புவதற்காக, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தி யசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளர்களை அலைக்கழித்து காக்கவைக்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்
தியர்களினால் பரிந்துரைக்கப்பட்ட நோயாளர்கள் சுமார் இரண்டு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டு காக்கவைக்கப்பட்டே அவசர நோயாளர் காவு வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு பரிந்துரைக் கப்பட்ட நான்கு நோயாளர்கள் கடந்த வெள்ளிக் கிழமை (ஓகஸ்ட்-02) அவர்கள் சிகிச்சை பெற்று வந்த விடுதிகளில் இருந்து சக்கர நாற்காலிகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இயங்கும் புதிய கட்டிடத்தின் கீழ் தளத்திற்கு அன்றைய தினம் மதியம் 2.00 மணியளவில் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
இருதய பாதிப்பு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் அம்பியூலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் மற்றைய நோயாளர்களும் அதில் ஏற்றப்பட்டிருந்தனர். சிறிது நேரத்தில் இருதய நோயாளி தவிர்நத ஏனைய நோயாளர்கள் அவசரமாக அதிலிருந்து இறக்கப்பட்டனர்.
மருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இளம் யுவதி ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாகவே அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட வேண்டியிருந்ததால் அவ்வாறு அவர்கள் இறக்கப்பட்டதற்கான காரணம் அங்கிருந்த ஊழியர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்றைய அம்பியூலன்ஸ் வந்து கொண் டிருப்பதாகவும் வந்த உடன் அதில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மற்றைய அம்பியூலன்ஸ் வண்டி உடனடியாகவே வந்திருந்த போதிலும் காக்கவைக் கப்பட்ட நோயாளர்களை விடுதிக்கு அழைத்து சென்று விடுமாறும் மாலை 4 மணிக்கு பின் னரே அம்பியூலன்ஸ் புறப்படும் எனவும் அம்பியூலன்ஸில் நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான பெண் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஏனைய சிற்றூழியர்கள் அதிருப்தியை வெளிக்காட்ட முடியாது நோயா ளர்களை விடுதிக்கு கொண்டு சென்றிருந் தனர். இந்நிலையில் திடீரென உடனடியாக நோயா ளர்களை பழைய வெளிநோயாளர் பிரிவு வாசல் பகுதிக்கு கொண்டு வருமாறு சிற்றூழியர்களுக்கு அறிவுறுத்தல் வந்துள்ளது. இதையடுத்து 06 ஆம் இலக்க விடுதியில் இருந்த நோயாளியை மீண்டும் சக்கர நாற்காலி மூலமாக அழைத்துச் சென்று அம்பியூலன்சில் ஏற்றிய நிலையில் புதிய கட்டடப் பகுதியில் வைத்து ஏனைய இரு நோயாளிகளும் அன்று பிற்பகல் 03.30 மணியளவில் ஏற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஏற்றப்பட்ட போதிலும் அம்பியூலன்ஸ் புறப்படாது காத்திருந்துள்ளது. ஏற்கனவே ஒரு அம்பியூலன்சில் ஏற்றி இறக்கப் பட்டதுடன் மீளவும் விடுதிக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்த நிலையில் அவதியுற்ற நோயாளிகள் மேலும் ஏற்பட்ட காலதாமத்தினால் அதிருப்தியடைந்து அம்பியூலன்ஸ் சாரதியிடம் தாமதத்திற்கான காரணத்தை வினவியபோது கடும் தொனியில் அதிருப்தியுடன் இதோ வாறா.. அவவிடமே கேளுங்கள் என்பதாக அம்பியூலன்சில் சாதரண உடையில் ஏறிய பெண்ணை காட்டி கூறியிருந்தார். அத்துடன் அவர்கள் ஏதோ கேக்கி னம் அதுக்கு பதில் சொல்லுங்கோ அதுக்கு பிறகு எடுக்கிறன் என குறித்த பெண்ணிடம் சாரதி தெரிவித்திருந்தார். குறித்த பெண் எதுவும் நடக்காதவர் போன்று அமைதியாக இருக்க சுமார் நான்கு மணியை நெருங்கும் நேரத்தில் அம்பியுலன்ஸ் புறப்பட்டது.
சாதாரண உடையில் தாமதமாக வந்து ஏறிய அம்பியூலன்ஸில் நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான பெண் உத்தியோகத்தரை புத்தூர் சந்திக்கு அண்மித்த பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு நோயாளர்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோக்கி பயணித்தது அம்பியூலன்ஸ்.
அம்பியூலன்ஸில் நோயாளர்களை அனுப் பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழி யரான குறித்த பெண் உத்தியோகத்தர் தனது கடமை நேரம் முடிந்த பின்னர் அம்பியூலன்சிலேயே வீடு திரும்பும் நோக்கிலேயே மதியம் 2.30 மணிக்கு அனுப்பவேண்டிய நோயாளர்களை 4.00 மணி வரை காத்திருக்க வைத்து அலைக்கழித்துள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது.
தனது சொந்த தேவைக்காக நோயாளர்களை காக்கவைத்து அலைக்கழித்துள்ளதுடன் அம்பியூல ன்ஸ் வண்டியில் வீடு திரும்பியுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாத செய்றபாடுகளாகும். குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வாறான தவறுகள் மீளவும் நடைபெறாதென்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
ஆனால் எமது இனத்தின் உயர்ந்த அறிவு சார் சமூகமாக கருதப்படும் மருத்துவ சமூகத்தால் புலம்பெயர் அமைப்புக்களின் துணையுடன் மேற்கொள்ளப்படும் இந்த முறைகேடுகளை தமிழ் சட்டவாளர்கள் கேடையமாக காத்து நிற்கையில் அதனை எதிர்த்து போராடுவது என்பது தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் சவாலான விடையம் என்பது தான் இங்கு முக்கியமானது.