மலையக சமூக மேம்பாட்டுக்காக விசேட ஜனாதிபதி செயலணி, மலையக தமிழ் குடும்பங்களுக்கு சொந்த உறுதியு டன் 7 பேர்ச்சஸ் காணியும், அதில் வீடும் வழங்கப்படுவதை உறுதிசெய்வோம். இந்த காணி வழங்களில் காணப்படும் அனைத்து நிர்வாக தடைகளும் நீக்கப்படும். தோட்டப்பகுதிகளில் 10 தேசிய பாடசாலைகள் அமைக்கப்படும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1500 ரூபா சம்பளம் உட்பட 10 விடயங்கள் சஜித்பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக மலையக மக்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்துள்ளதாவது,
அத்துடன் உயர்கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்த மலையக பல்கலைக்கழகம்.உருவாக்கப்படும். தொழில் வலயங்களும், அவற்றுடன் தொடர்புற்ற தொழிற்பயிற்சி நிறுவனங்களும் தோட்ட பிரதேசங்களில் இங்குள்ள இளைஞர்களுக்காக அமைக்கப்படும்.
நாடெங்கும் கல்வி மற்றும் பயிற்சி நிறு வனங்களில் மலையக தமிழர்களின் பிரதி நிதித்துவத்தை அதிகரிப்பதற்கான நன் னோக்கு எதிர்மறை திட்டம் நடைமுறை யாகும். நாட்டின் ஏனைய பிரதேச சுகாதார சேவைக்கு ஒப்பான தரமான சுகாதார சேவையை தோட்டப்புறத்திற்கும் பெற் றுத் தருவோம். தோட்டத்தொழிலாருக்கு 1500 ரூபா நாளாந்த சம்பளம்.
“மலையக தமிழ் விவசாயி”களாக, நிலை யான வருமானம் பெற்றுக்கொள்வதற்காக, தனியார், அரச பெருந்தோட்டங்கள் மீள் கட்டமைப்பு செய்யப்படும். இந்த மலையக விவசாயிகளிடமிருந்து விளை பொருட் களை விலைக்கு வாங்கி, தோட்ட நிறுவ னங்களும், இந்த மலையக விவசாயிக ளும் பங்காளர்களாகும் வெளிவாரி தொழில் முறைமை உத்தரவாதம் செய்யப்படும்.