“பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்தகாலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சத்தை ஒழிப்போம், பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை. இவர்களையும் இலஞ்சத்துக்கு துணை போனவர்களாகத்தான் பார்க்க முடியும்” என்று கூறியிருக்கிறாா் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனை அவா் தெரிவித்தாா்.
“பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்தகாலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சத்தை ஒழிப்போம், பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை. இவர்களும் இலஞ்சத்துக்கு துணை போனவர்களாகத்தான் பார்க்க முடியும்” எள்றும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தாா்.
“தமிழகம் சென்றிருந்த போது, இலங்கை விடயம் சம்மந்தமாக தி.மு.க. கனிமொழியுடன் சந்திப்பை நடத்தியிருந்தோம். மத்திய அரசில் தமழ் மக்கள் தொடர்பில் கரிசனை குறைந்துள்ளது” என்று தெரிவித்த சுமந்திரன், “புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு மூன்று ஆண்டுகள் தேவை என்று அரசாங்கம் கூறுகிறது. அவ்வாறு தேவையில்லை. ஏற்கனவே இணங்கிக் கொண்ட விடயம். எனவே இவ்வளவு காலம் தேவையில்லை” என்றும் அவா் மேலும் தெரிவித்தாா்.
”தமிழரசு தலைமை தொடர்பிலும், புதிய அரசியல் அமைப்புத் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் பேசுவருகின்ற விடயம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி மத்திய குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம்” என்றும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்



