மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்க…

பாதாள குழுக்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய வகையில் பாதுகாப்பு மீளாய்வை செய்து மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு,

” உள்ளுராட்சிசபை உறுப்பினர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள்வரை தமக்குரிய மக்கள் சேவையை முன்னெடுக்கும்போது தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதாவது பாதாள குழுவானது சமூகத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

உரிய பாதுகாப்பு மீளாய்வின் பின்னர் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அரச தரப்பில் கூறப்பட்டது. அந்த பாதுகாப்பு மீளாய்வு எப்போது நிறைவு பெறும்? வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை சுட்டுக்கொலை செய்தவர்கள் எப்போது கைது செய்யப்படுவார்கள்?

உள்ளுராட்சிசபை உறுப்பினர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள்வரை மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.” – என்றார் சஜித் பிரேமதாச.