வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவியான இளம் கண்டுபிடிப்பாளரான பி. ரோகிதாவை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (7.12) இடம்பெற்றது.
லண்டனை சேர்ந்த கந்தப்பிள்ளை திலீபனின் ஏற்பாட்டில் தமிழ் விருட்சததின் ஊடாக இவ் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
தமிழருவி த. சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சாதனை மாணவிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்புக்கள் இடம்பெற்றதுடன் சிறிதளவாhன நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீpபா, மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், சிரேஸ்ட சட்டத்தரணி க. தயாபரன், வைத்திய கலாநிதி கோணேஸ்வரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் வர்த்தகர் சங்கம், வர்த்தகர் நலன்புரிச்சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். எஸ். வாசன் உட்பட மாணவியின் ஆசிரியை மற்றும் தயார் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.